
கொழும்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன இதனை கூறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெருமவுடன் இது தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில் மாணவர்கள் பரீட்சைக்கு தயாராக தேவையான காலத்தை முகாமைத்துவம் செய்து பரீட்சைகளை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கல்வியமைச்சருக்கு அறிவித்துள்ளார்.
அதே வேளை சுகாதார பரிந்துரைகளுக்கு அமைய பாலர் பாடசாலைகள் மற்றும் முதலாம், இரண்டாம் ஆண்டுகளில் பயிலும் மாணவர்கள் முகக்கவசங்களை அணிவது சிரமம் என்பதால், மாணவர்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பாக கூடிய கவனத்தை செலுத்தி அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் ஓகஸ்ட் 10ம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
0 comments